×

தேர்தலில் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிசாமி திமுக மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்: ஆர்.எஸ்.பாரதி எம்பி பரபரப்பு பேட்டி

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி நேற்று அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:  9 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடந்தது. அந்த தேர்தல் எவ்வளவு நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த இடத்திலும் தவறு நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியோ, அவருடைய கட்சிகாரர்களோ நீதிமன்றத்தின் வாயிலாக சென்று ஏதேனும் புகார் கொடுத்தார்களா என்றால் இல்லை. 9 மாவட்டங்களில் எந்தளவுக்கு நேர்மையாக  ஊராட்சிகளுக்கான தேர்தல்  நடைபெற்றதோ, அதேபோல் தான் இன்று தேர்தல் நடைபெறும். அதிமுக ஆட்சி காலத்தில் எப்படி தேர்தல் நடத்தினீர்கள். எடப்பாடி மாவட்டமான சேலத்தில் இளங்கோ என்கிற அவருடைய உதவியாளர் தேர்தல் முடிவுகளை எல்லாம் மாற்றி மாற்றி அறிவித்தார். உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,  நீதிபதி சத்தியநாராயணன் அமர்ந்து எங்களுடைய கோரிக்கைகளை கேட்டு, எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என சொல்லி இந்த வழிமுறைகளில் தான் வாக்குகள் எண்ண வேண்டும் என உத்தரவு போட்டு,  இரவு 12 மணிக்கு மு.க.ஸ்டாலின் நியாயத்தை நிலைநாட்டினார். அப்போது 60 சதவீதம் திமுக ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. கோயம்புத்தூரிலே இன்றைக்கு அவர் பயப்பட என்ன காரணம்.ஏற்கனவே கோவை மாவட்டம் தன்னுடைய கோட்டை என நினைத்து கொண்டிருந்தார். அந்த கோட்டையை மு.க.ஸ்டாலினும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் 8 மாதங்களாக  அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதற்காக ஈடுபட்டதன் விளைவு,  அதிமுக கோட்டை தகர்க்கப்பட்டிருக்கிறது. அதை தாங்கிக் கொள்ள முடியாமல் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யும் நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய பொய்யர் என்பதை  நிரூபிக்கும் வகையில் பேட்டி கொடுத்து இருக்கிறார்.  தோல்வி பயத்தால், முன்கூட்டியே இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். நிச்சயமாக கோவை மட்டும் அல்ல தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்.  இவ்வாறு அவர் கூறினார்….

The post தேர்தலில் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிசாமி திமுக மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்: ஆர்.எஸ்.பாரதி எம்பி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edapadi ,Dhimuka ,R. S. Bharati ,Dhimuka Organization ,Anna ,Wawalayat ,
× RELATED தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு...